அன்று ஆதரவு; இன்று எதிர்ப்பு: விஜய் பேச்சால் குழப்பத்தில் த.வெ.க.,
UPDATED : மார் 06, 2026 05:02 AM
06-மார்-2026 06:40
விஜய் நடத்தும் பேரணிகளிலும் கூட்டங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடினாலும், கட்சியை சரிவர நடத்தவோ ஆலோசணை கூறவோ யாருமில்லாத நிலையில் இன்னமும் விஜய் ஒரு தனி மரம் தான் .எம்.ஜி.ஆரோடு இருந்து இப்போது விஜய் கட்சியில் சேர்ந்த ஒரே ஒரு அரசியல்வாதியான செங்கோட்டையன் கூட தனது எதிர்காலம் வீணாகி விட்டது என எண்ணி வருந்துவதாக அறிகிறோம். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எழுபத்தைந்து சதவிகிதம் தி.மு.க. அரசின் இலவசம் மற்றும் சலுகைகளை பெறும் பயனாளிகளக இருப்பவர்கள் தான். இதன் ருசியை இலவசமாக அனுபவித்து வரும் இவர்களின் மனம் மாறி விடும் என விஜய்யை போல் யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். மேலும் எம்.ஜி.ஆர் போல் எந்த ஒரு புரட்சியையும் விஜய்யால் செய்ய முடியாது. எம்.ஜி.ஆர் தாய் கழகத்தில் இருக்கும் போதே அந்த கட்சிக்குள்ளேயே மூத்த தலைவர்களையும் சேர்த்து ஒரு சராசரியான எண்ணிக்கையில் ஆதரவாளர்களை தனது நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற்றி தன் தலைமையில் ஒரு தனி கட்சிக்கு தேவையான அனைத்தையும் தாய் கழகத்தில் இருந்து கொண்டே செய்த பின்- அதில் வெற்றி அடைய கூடிய நிலை உருவான பிறகே கட்சியை உடைக்கவும் அ.தி.மு.க.வை உருவாக்கவும் அவரால் முடிந்தது. அவர்கள் அனைவரும் கூடவே இருந்ததாலும் மக்களில் பலர் அவரது ரசிகர்களாக இருந்ததாலும் அ.தி.மு.க. ஆரம்பித்த போதே அது வெற்றி பெறும் கட்சியாக தான் தோன்றியது. இந்த எம்.ஜி.ஆரின் அசூர பலம் விஜய்க்கு கண்டிப்பாக வர போவதில்லை.
